search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கைதானவர் விடுதலை"

    குண்டர் சட்டத்தில் கைதானவரை தவறுதலாக விடுதலை செய்த புழல் சிறை வார்டன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதில் முறைகேடு நடந்துள்ளதா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    செங்குன்றம்:

    சென்னை தண்டையார்பேட்டை செல்லியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரவி (வயது 26). இவர் கடந்த ஆண்டு ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவின்படி அவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    ஆனால் அவர் தன்னை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தது செல்லாது என்று சென்னை எழும்பூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை தள்ளுபடி செய்த எழும்பூர் கோர்ட்டு, ரவியை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்தது சரியே என உத்தரவிட்டது. இதற்கான உத்தரவு நகல் புழல் சிறைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

    கடந்த டிசம்பர் மாதம் 28-ந் தேதி புழல் சிறையில் கூடுதல் கண்காணிப்பாளராக இருந்த சேகர் அந்த உத்தரவு நகலை சிறை வார்டன் பிரதீப்(26) என்பவரிடம் கொடுத்தார். ரவியின் குண்டர் தடுப்பு சட்டம் உத்தரவை உறுதி செய்து பதிவேட்டில் எழுதும்படியும் கூறினார்.

    2 மாதங்களுக்கு முன்பு கூடுதல் கண்காணிப்பாளர் சேகர் ஓய்வுபெற்றுவிட்டார். இந்தநிலையில் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் இருக்க வேண்டிய ரவி சிறையில் இருந்து விடுதலையாகி வெளியில் சுற்றிக்கொண்டிருப்பதை உளவுத்துறை போலீசார் கண்டுபிடித்தனர். இதுபற்றி சென்னை போலீஸ் கமிஷனருக்கு தகவல் தெரிவித்தனர்.

    விடுதலையான ரவி

    குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதான ரவி எப்படி விடுதலை ஆனார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெயில் உத்தரவை சரியாக படிக்காமல் வார்டன் பிரதீப் வேறு கைதிக்கு பதில் ரவியை தவறுதலாக விடுதலை செய்தாரா? அல்லது ரவியின் உறவினர்களிடம் இருந்து பணம் பெற்றுக்கொண்டு முறைகேடாக செயல்பட்டாரா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையில் சிறைத்துறை அதிகாரிகளால் சிறை வார்டன் பிரதீப் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும் தலைமறைவாக உள்ள ரவியை போலீசார் தேடி வருகின்றனர். 
    ×